சுட்டுக் கொல்லப்பட்ட கேங்ஸ்டர்களுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர் - போராட்டத்தில் இறங்கிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு

x

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கேங்ஸ்டரும் அரசியல் வாதியுமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் கடந்த சனியன்று போலீசார் முன்னிலையில், 3 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மஜால்காவுன் பகுதியில் அவர்களை தியாகிகள் என பாராட்டி சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது... இதை எதிர்த்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு போராட்டத்தில் இறங்கியது. தொடர்ந்து களத்தில் இறங்கிய காவல்துறையினர் அந்த போஸ்டர்களை உடனடியாக அகற்றியதோடு இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்