சாலையில் ஒரே நேரத்தில் 3 பேரின் உயிரை பறித்த போன் - சென்னை அருகே பயங்கரம்

x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் 3 இலங்கை தமிழர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர்கள், தயாளன், சார்லஸ் மற்றும் ஜான். இந்த மூன்று இளைஞர்களும் கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்ற நிலையில், மூவரும் செல்போன் பார்த்து கொண்டே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞர்களின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்