ஓடும் பேருந்தின் அடியில் பாய்ந்த நபர்... டயரில் சிக்கி தலை நசுங்கி பலி - நடுங்க வைக்கும் கோர வீடியோ

x

தெலங்கானா மாநிலம் கோண்டாபூரில் ஓடும் பேருந்தின் அடியில் தலையை வைத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிசு ரஜப் என்பவர் ஓடும் பேருந்தின் சக்கரத்தின் அடியில் தலையை வைத்த நிலையில், சுதாரித்த ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டும் கூட பலனளிக்கவில்லை. அருகில் இருந்தவர்கள் பிசு ரஜப்பை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்