100 ஆண்டுகளாய் இருந்த பாதையில் குப்பை கொட்டி அட்ராசிட்டி செய்யும் நபர்

x

மதுரை மாவட்டம் ஒத்தப்பட்டி அருகே அசுவமா நதியில் உள்ள பாதையை அப்பகுதி மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்துள்ளனர். ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனிநபர் ஒருவர் குப்பைகளை கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்வோரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்