ஆக்ரோஷமாக ஓடி பேருந்தில் மோதி தலையால் கண்ணாடியை உடைத்த நபர் - டிரைவர் சீட்டில் அமர்ந்து அட்டூழியம்

x

கேரளாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தின் கண்ணாடியை தலையால் மோதி உடைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளா மாநிலம், மலப்புரம் அருகே பெருந்தல்மண்ணா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தின் கண்ணாடி மீது மோதி, அதன் கண்ணாடியை ஒரு நபர் உடைத்தார். விசாரணையில், அவர் பெயர் ராஜேஷ் என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அந்நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்நபர் பேருந்தின் கண்ணாடியை உடைக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்