டிக்கெட் கேட்டதற்கு கண்டக்டரை ஓங்கி பளார் பளார்ன்னு தாக்கிய பயணி - சேலத்தில் பரபரப்பு

x

சேலத்தில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துநர், தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, வாழப்பாடிக்கு வழக்கம் போல் அரசுப்பேருந்து சென்றுள்ளது. இதில் சதீஷ் என்பவர் படிக்கட்டில் பயணம் செய்துள்ளார். அவரிடம் நடத்துநர் டிக்கெட் எடுக்க கூறிய போது, அடுத்த நிறுத்தத்தில் இறங்க போவதாகவும், அதனால் டிக்கெட் எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் நடத்துநருக்கும், சதீஷ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது முற்றவே, சதீஷ் நடத்துநரை தாக்கியுள்ளார். இதனையறிந்த ஓட்டுநர் பேருந்தை அப்படியே நிறுத்திவிட்டு, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நடத்துநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சதீஷை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்