பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் தப்பிக்க உயிரை பணயம் வைத்த பயணி - மிரண்ட ஓட்டுநர், நடத்துநர்

கடலூர் அரசு பேருந்தில் மது போதையில் நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்ட நபர் ஒருவர் பேருந்து காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்டதால், தப்பிப்பதற்கக குளத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து இடையக்குறிச்சி கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று இரவில் சென்று கொண்டிருந்தது. அப்போது மது போதையில் பேருந்தில் ஏறிய நபர் ஒருவர், டிக்கெட் எடுக்காமல் நடத்துநர் முருகானந்தனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேருந்து கருவேப்பிலங்குறிச்சி காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டு அந்த நபர் மீது புகாரளிக்க நடத்துநரும், ஓட்டுநரும் உள்ளே சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் தப்பித்து செல்வதற்காக காவல்நிலையம் முன்பு உள்ள குளத்தில் குதித்துள்ளார். இதனால் பரபரப்படைந்த பேருந்தில் இருந்தவர்கள் காவலர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனே, தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, குளத்தில் குதித்த நபரை வீரர்கள் தேட ஆரம்பித்தனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் தேடும் பணியை கைவிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்