திருப்பதி ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு வரும்போது பதறிப்போன தனுஷ்

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் குடும்ப உறுப்பினர்களுடன் சாமி தரிசனம் செய்தார். முடி காணிக்கை அளித்து தனுஷ் ஏழுமலையானை வழிபட்ட நிலையில், அவரின் வருகையால் ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.

தனுஷை ரசிகர்கள் நெருங்காத வண்ணம், தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு வளையத்தைத் தாண்டிச் சென்று தனுஷை அவரது பாதுகாவலர்கள் மனித அரண் அமைத்து அழைத்து வந்தனர்.

கூட்டத்தில் ரசிகர் ஒருவர் கீழே விழவே, தனுஷ் அவரை எழுப்ப உதவினார். தனுஷைக் காண குவிந்த ரசிகர்களால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்