டெல்லியில் புதிதாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு
டெல்லியில் புதிதாக ஒருவருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. டெல்லியில் 31 வயதான நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண்மணிக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் லோக் நாயக் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு சமீபத்திய வெளிநாடு பயண விவரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story