9 மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு தாயின் விபரீத முடிவு

x

சின்னசேலம் அருகே சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு - மகாலட்சுமி தம்பதிக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், 9 மாதத்தில் கைக்குழந்தை உள்ளது. திருநாவுக்கரசு சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், மகாலட்சுமி, தனது மாமனார் மாமியாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், மகாலட்சுமி, தனது 9 மாதக் கைக்குழந்தையை விட்டுவிட்டு, வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்