கிணற்றை தூர்வாரும் போது நிகழ்ந்த அதிசயம்.. பல அடி ஆழத்தில் 4 அடி அம்மன் சிலை..! - ஆச்சரியத்தில் உறைந்த ஊர் மக்கள்

x

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கிணற்றை தூர்வாரும் போது 4 அடி உயரம் கொண்ட அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது

களியாம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரையில், ஊராட்சிக்கு சொந்தமான பழைமையான குடிநீர் கிணறு உள்ளது. தற்போது, இந்த கிணற்றில் தூர்வாரும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், கிணற்றில் தொழிலாளர்கள் தூர் வாரிக் கொண்டிருந்தபோது, 4 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட புதிய அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், அம்மன் சிலையை கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், சிலை எவ்வாறு கிணற்றுக்குள் வந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்