மணப்பெண்ணுக்கு திருநங்கை அனுப்பிய மெசேஜ்ஜால் துக்க வீடான 'திருமண வீடு'.. தாலி கட்டுவதற்குள் தாயின் சேலையில்.. அஸ்தியாக்கிய அஸ்மா

x

நான்கு நாட்களில் புதுமாப்பிளையாக மணவறைக்கு செல்ல இருந்த இளைஞர், திருநங்கையுடனான பழக்கத்தால், பிணவறைக்கு சென்ற சோக சம்பவம், சேலத்தில் அரங்கேறி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

இரு இளம் மனசுகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இரு வீட்டாரும் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், திருநங்கையிடம் இருந்து மணப்பெண்ணின் செல்போனுக்கு அனுப்பப்பட்ட அந்த செய்தி....

நான்கு நாட்களில் திருமணம் என கலகலப்பாய் இருந்த வீடை துக்க வீடாக மாற்றி அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஐவேலி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். 27 வயதான இவருக்கு, சேலம் ஏத்தாப்பூரை சேர்ந்த பெண் ஒருவருடன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது...

ஏப்ரல் 20 ஆம் தேதி உற்றார் உறவினர் சூழ திருமனம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், மே 25 ஆம் தேதி அன்று திருமணம் நடத்த பெரியோர்கள் தேதி குறித்துள்ளனர்...

இதில், எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த விக்னேஷ், திருமணம் நடைபெற இன்னும் நான்கு நாட்களே உள்ளது என்ற நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

இளைஞரின் தற்கொலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விக்னேஷின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் நடத்திய விசாரணையில், பல பரபரப்பான தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது...

எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்த விக்னேஷ், சங்ககிரி, குப்தா காலனியில் புதிதாக கட்டி வந்த வீட்டுக்கு எலக்ட்ரீசியன் வேலைக்காக சென்றுள்ளார்...

அப்போது, வீட்டின் உரிமையாளரான அஸ்மா என்ற திருநங்கையுடன் விக்னேஷுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது...

இதில், இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், அதற்கிடையில் தான் விக்னேஷிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது...

விக்னேஷிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த அஸ்மா, இதனால் விக்னேஷ் தன்னுடன் பழகுவதை நிறுத்தியதை அறிந்து ஆத்திரமடைந்துள்ளார்...

இந்நிலையில், விக்னேஷ் திருமணம் செய்ய இருந்த பெண்ணை தொடர்பு கொண்ட அவர், விக்னேஷ் தனது கணவர் என கூறி இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்...

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், இது குறித்து தனது வீட்டாரிடம் தெரிவிக்கவே, பரபரப்பான அவர்கள் சட்டென கிளம்பி விக்னேஷின் வீட்டாரிடம் இது பற்றி கேட்டுள்ளனர்...

இவ்வாறு இளைஞரின் வீட்டாரிடம் பெண் வீட்டார் விசாரணை நடத்தி கொண்டிருக்கும் போது, அங்கு வந்த அஸ்மா, விக்னேஷின் தந்தையை மாமானார் எனவும், தாயை மாமியார் எனவும் உறவு முறையில் அழைத்து தகராறு செய்துள்ளார்...

இதனால், பரபரப்பாகி போன அந்த இடத்தில், விக்னேஷின் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்து போக, பெண் வீட்டார் செய்வதறியாமல் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு திரும்பியுள்ளனர்..

ஏற்கெனவே, தான் திருமணம் செய்ய உள்ள பெண்ணிடம் தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி அஸ்மா தகராறு செய்ததை அறிந்து விக்னேஷ் மன வேதனையில் இருந்துள்ளார்...

இந்நிலையில், அரங்கேறிய இந்த சம்பவம் விக்னேஷின் மனதை பெரிதும் பாதித்திருக்கிறது... இதனால் மன சோர்வுடனே காணப்பட்ட அவர், நான்கு நாட்களில் திருமணம் என்ற நிலையில், தனது தாயின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, கலகலப்பாக இருந்த கல்யாண வீட்டையே துக்க வீடாக மாற்றி, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்