காதல் நாடகமாடி பள்ளி சிறுமியை கடத்திய திருமணமான நபர்..! மேற்குவங்கத்தில் அடைத்து வைத்த கொடூரம்

x

கேரளாவை சேர்ந்த 15 வயது சிறுமியை மேற்குவங்கத்திற்கு கடத்திச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறுமியை மீட்டனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், மேற்குவங்கத்தை சேர்ந்த 23 வயதாகும் சுகைல் ஷேக் என்பவர் தங்கி பணியாற்றி வந்தார். இவருக்கும், வெங்கல்லூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. தனக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதை சுகைல் மறைத்து காதல் நாடகமாடியுள்ளார். கடந்த 22ம் தேதி, சிறுமி திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், சுகைல் மற்றும் சிறுமி முர்ஸிதாபாத் சென்றது தெரியவந்தது. சிறுமியை மீட்க கொல்கத்தா சென்ற போலீசார், பின்னர் முர்சிதாபாத்தில் சுகைலின் உறவினர் வீட்டில் சிறுமி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அம்மாநில போலீஸ் உதவியுடன் சிறுமியை மீட்டனர். சுகைலை கைது செய்த போலீசார், போக்சோ உட்பட கடத்தல் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்