டி.ஐ.ஜி.யின் கார் ஓட்டுனராக பணியாற்றிய நபர் ஓட்டுநர் பணியை விட்டுவிட்டு கஞ்சா விற்பனை

x

சென்னை கே.கே.நகர் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், பூவரசன் என்ற இளைஞரிடம் இருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து பூவரசனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கடலோர காவல் படை டிஐஜிக்கு கார் ஓட்டுநராக பணியாற்றி இருப்பது தெரியவந்த‌து.

மூன்று மாதம் வரை ஓட்டுநராக பணியாற்றிய பூவரசன், பின்பு அந்த வேலையை பிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் காய்கறி மூடை தூக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது, மகேஷ் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பின் மூலம் பூவரசன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது, தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, கஞ்சா விற்பனையில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்