வானை நோக்கி பறவைக்கு வைத்த குறி... கட்டிட தொழிலாளி மீது பாய்ந்த குண்டு - சென்னையில் பரபரப்பு

x

வானை நோக்கி பறவைக்கு வைத்த குறி... கட்டிட தொழிலாளி மீது பாய்ந்த குண்டு - சென்னையில் பரபரப்பு


சென்னையில் கட்டிட தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

சென்னை மாதவரம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சென்டஸ்க் என்பவர் கட்டிட தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதில், கட்டிடத்தின் 60 அடி உயரத்தில் பணி புரிந்து கொண்டிருந்த சென்டஸ்க்கின் கையில் திடீரென துப்பாக்கியின் தோட்டா பாய்ந்து படுகாயமடைந்தார். உடனே, சென்டஸ்க் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து லாரன்ஸ் என்பவர் ஏர்கன் துப்பாக்கி மூலம் சுட்டது தெரியவர அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், வானத்தில் பறவையை சுட முயன்ற போது எதிர்பாரத விதமாக தொழிலாளி மீது தோட்டா பாய்ந்ததாக தெரிவித்த நிலையில், அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், நபரை சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்