சென்னையில் பிரபல மாலில் பெண்கள் கழிவறையை எட்டிப்பார்த்த நபர் சிக்கினார்

x

சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண்களின் கழிவறைக்கு எட்டிப் பார்த்த நபரை போலீசார் சிறையில் அடைத்தனர். நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள கழிவறைக்கு பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது, பக்கத்து கழிவறையிலிருந்து யாரோ பார்ப்பது போன்று தெரிய வரவே கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் வந்து, பக்கத்து கழிவறையில் இருந்து நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், திருவொற்றியூர் சாத்துமா நகர் பகுதியில் சேர்ந்த அசோக்குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குபதிந்த போலீசார், சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்