இஸ்லாமிய பெண்ணுடன் ஏற்பட்ட காதல்... இளைஞரை துண்டு துண்டாக வெட்டி சாக்கடையில் வீசிய பெண் குடும்பத்தார்

x

ஹிமாச்சல் மாநிலம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் 21 வயது இளைஞர் மனோகர் லால். இவரை கடந்த ஜூன் 6 ஆம் தேதி முதல் காணவில்லை என கூறி அவரது குடும்பத்தார் தேடி வந்தனர். இந்நிலையில், இளைஞரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், சாக்கடையில் இருந்து சாக்கு மூட்டையில் எடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இஸ்லாமிய பெண் ஒருவரை மனோகர்லால் காதலித்து வந்தது தெரியவந்தது. இந்த காதல் பெண் வீட்டாருக்கு பிடிக்காததால், காதலை கைவிடக் கோரி மனோகர்லாலை எச்சரித்துள்ளனர். இதையும் மீறி இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜூன் 6 ஆம் தேதி இளம் பெண்ணை அவரது வீட்டிலே சென்று மனோகர் லால் சந்தித்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார், இளைஞரை அடித்து கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டியது தெரியவந்துள்ளது. உடல் பாகங்களை சாக்கு மூட்டையில் வைத்து சாக்கடையில் வீசியது தெரியவர, பெண்ணின் சகோதரர் உட்பட மூவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்