நீதிமன்றத்தின் நடு வழியில் நின்ற லிப்ட் - உள்ளே சிக்கிய வழக்கறிஞர்கள்..."ஆக்சிஜன் இல்லாமல் தவித்த"

x

எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூர் நீதிமன்றத்தில், கீழ்த்தளத்தில் இருந்து 3 பெண் வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியரும் மூன்றாவது தளத்துக்கு சென்றபோது, நடுவழியில் லிப்ட் பழுதாகி நின்றது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு லிப்டை உடைத்து, உள்ளிருந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். லிப்டில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், வெளியில் இருந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. சுமார் 45 நிமிட முயற்சிக்குப் பிறகு அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்