கஸ்டமர்களை ஏமாற்றாத ஹோட்டல்.. வயிறு குளிர தக்காளி சட்னி.. அதே ரேட் தான்.. சென்னையில இப்படியொரு மனுசனா?

x

சென்னையில் இன்று தக்காளியின் விலை 10 ரூபாய் அதிகரித்து கிலோ 140 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான கடைகளில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் ஆகியவற்றின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரிய கடைகளே திரும்பி பார்க்கும் வகையில், வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு சிற்றுண்டி கடையில், தனது வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாது என தொடர்ந்து தக்காளி சாதமும், தக்காளி சட்னியும் விற்கப்பட்டுவருகிறது. இது குறித்து அந்த கடையின் உரிமையாளரிடம் கேட்கும் போது விலைவாசி உயர்வு குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்