மதுரை TO சென்னைக்கு 2 மணி நேரத்தில் பறந்த இதயம்.. இறந்தும் உயிர் வாழும் நபர்

x

மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர், மூளைச்சாவு அடைந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் இதயத்தை, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்ட இதயம், விமான நிலையத்தில் இருந்து கிரீன் காரிடர் அமைக்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன்படி 2 மணி நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு இதயம் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்