பட்டு சேலையில் ஒரு தங்க சிலை! காதலனைக் கரம் பிடிக்க தமிழகம் பறந்து வந்த தைவான் பெண்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்த ஆவத்துப்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஜப்பான் பல்கலைக்கழகத்தில் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

அதே பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் தைவானைச் சேர்ந்த சியாங் ஷியா ஜங்கிற்கு ராஜேந்திரனுடன் காதல் மலரவே, இருவரின் வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குடும்பத்துடன் காவேரிப்பட்டணம் வந்தடைந்த சியாங் ஷியாவுக்கு அங்குள்ள வெங்கட்ரமண் சாமி கோயிலில் திருமணம் நடைபெற்றது. பட்டு சேலை அணிந்து தமிழ் பெண்ணாகவே மாறிய சியாங், அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தனது நீண்ட கால காதலனான ராஜேந்திரனை மணம் முடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்