சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இரண்டு ரவுடிகளை பட்டாக்கத்தியோடு ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயன்ற கும்பல்

x

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் யுவராஜ். சரித்திரப்பதிவேடு ரவுடினாயன இவர், கஞ்சா வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, உயர்நீதிமன்ற தெற்கு நுழைவுவாயில் வெளியே நண்பர் சந்தோஷ் என்பவரோடு நின்று பேசிகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்தியோடு ஓட ஓட விரட்டியிள்ளனர். அலறியடித்து உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஓட்டம் பிடித்த 2 பேரும், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் தஞ்சம் புகுந்தனர். விசாரணையில், A+ சரித்திரப்பதிவேடு ரவுடி குள்ளகார்த்திக் என்பவர் முன்பகை காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்றது தெரிய வந்த‌து. இதையடுத்து, அவர்களை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து போலீசார் தேடி வருகின்பனர்.


Next Story

மேலும் செய்திகள்