அடகு வைக்க கொடுத்த நகையை திருப்பி தராத ஆத்திரத்தில் நண்பனை சரமாரியாக வெட்டி கொன்ற சக நண்பன் - சென்னையில் பயங்கரம்

x

பெரியபாளையத்தை அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் பிரகாசும், கிருஷ்ணாபுரம் கண்டிகையை சேர்ந்த சக லாரி ஓட்டுனர் சூர்யாவும் நண்பர்களாக இருந்தனர். சூர்யாவிடம் இருந்து அடகு வைப்பதற்காக வாங்கிய அரை சவரன் நகையை பிரகாஷ் திருப்பித் தரவில்லை. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நகையை திருப்பிக் கேட்டு நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், அக்கரப்பாக்கத்தில் உள்ள மண் மண்குவாரிக்கு வந்தபோது, சூர்யா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டார். இதில், பலத்த காயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் போலீசார், பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் சூர்யாவையும் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்