"ஒரு சில ரசிகர்களுக்கு புரிவதில்லை" - அடுத்த குண்டை தூக்கி போட்ட ஜடேஜா

x

சென்னை அணியின் சில ரசிகர்கள் தனது முக்கியத்துவத்தை உணர்வதில்லை என ஆல்ரவுண்டர் ஜடேஜா கிண்டல் அடித்துள்ளார். போட்டியின் முக்கியத்துவம் வாய்ந்த வீரர் விருதை ஜடேஜா வென்றார். இந்நிலையில், விருதுடன் நிற்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜடேஜா, விருது கொடுப்பவர்களுக்கு தனது முக்கியத்துவம் தெரிகிறது என்றும், ஆனால் சில ரசிகர்களுக்கு அது தெரிவதில்லை என்றும் ஸ்மைலியுடன் பதிவிட்டு உள்ளார். ஜடேஜா பேட்டிங் செய்யும்போது, தோனி வர வேண்டும் என ரசிகர்கள் கோஷமிடுவதும், ஜடேஜா ஆட்டமிழக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புவதும் தொடர் கதையாகி உள்ள நிலையில், ஜடேஜா இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்