மகனை தள்ளிவிட்டு உயிரை விட்ட தந்தை - அதிர்ச்சி சம்பவம்

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, உயிருக்குப் போராடிய மகனைக் காப்பாற்றபோய், தந்தை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்ராஹிம் ஷா என்பவரின் மகன் அன்சாரி, வீட்டின் மேல் மாடியில் உள்ள மின்கம்பியில் இருந்த மின்சாரம் பாய்ந்ததில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை இப்ராஹிம் ஷா, மகனை தள்ளிவிட்டதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த அன்சாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்