நிலம் கேட்டு பயங்கர மிரட்டல்? தற்கொலை செய்து கொண்ட விவசாயி... விவரிக்கும் பகீர் பின்னணி | Dindigul

x

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரை சேர்ந்த விவசாயி பாண்டி..

இவர் மகனிடம் வழக்கறிஞர் உட்பட சிலர், நிலத்தை எழுதித்தருமாறு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் புகாரளித்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டி, காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாண்டியின் உடலைப் பெற உறவினர்கள் மறுத்த நிலையில், போலீசார் உறுதியளித்த நிலையில், உடலை பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து நிலம் கேட்டு மிரட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்