லட்டுகளை வாங்கி நாமம் போட்ட ஃபேக் அரசியல் பிரமுகரால் சென்னையில் பரபரப்பு

x

சென்னையில் அரசியல் பிரமுகர் போல் டிப்டாப்பாக வந்து, வட மாநில தொழிலாளியிடம் செல்போன் திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர

சென்னை, கேகே நகரில் உள்ள பேக்கரியில் அரசியல் பிரமுகர் போல் மாஸ்க் அணிந்து வந்த நபர் ஒருவர் , 2500 ரூபாய்க்கு லட்டுகளை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்ததற்கான பணத்தை கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை அனுப்பி வைத்தால் அவரிடம் கொடுத்து விடுவதாக கூறிய நிலையில், கடையில் பணிபுரிந்த வடமாநில இளைஞர் ஒருவரை, கடை உரிமையாளர் அனுப்பி வைத்திருக்கிறார். இந்நிலையில், வடமாநில இளைஞரை அழைத்து சென்ற அவர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை சுட்டிக்காட்டி, அங்குள்ள தனது வீட்டில் பணம் பெற்றுக்கொள்ள கூறியிருக்கிறார். மேலும், தன்னிடம் செல்போன் இல்லை எனவும், தன்னுடைய அம்மாவை பணம் கொடுக்க சொல்லி நியாபகப்படுவதற்காக வடமாநில இளைஞரிடமிருந்து செல்போனை கேட்டு பெற்றிருக்கிறார். செல்போனை அவரிடம் கொடுத்து விட்டு மேலே சென்ற வடமாநில இளைஞர், நபர் செல்போனுடன் தப்பிச்சென்றதை பார்த்து அதிர்ச்சியை அடைந்தார். இது குறித்து வடமாநில இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குபதிவு செய்த போலீசார், மர்மநபரை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்