நலிந்து வரும் தீப்பெட்டி உற்பத்தி தொழில்... வருவாய் இழப்பில் ஆலை உரிமையாளர்கள்

x

தீப்பெட்டி தொழில் நலிவுற்று வருவதால் தீபாவளி போனஸ் கிடைக்குமா என்று கேள்விக்குறியாக இருப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சைனா லைட்டர் வருகையால் தீப்பெட்டி தொழில் நலிவடைந்து வருகிறது. தீப்பெட்டி ஏற்றுமதியும் குறைந்து வருவதால், தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி நெருங்குவதால் தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆலை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வங்கி மற்றும் தனியாரிடம் கடன் வாங்கிதான் போனஸ் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்