குடி போதையில் சண்டை... இடையில் சிக்கி கொண்ட டீ கடை

x

சேலத்தில், மதுபோதையில் மூவருக்கு இடையே நடந்த மோதலில், ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சீலநாயக்கன்பட்டியில் உள்ள தேநீர் கடைக்கு மதுபோதையில் வந்த மூன்று பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பின்னர், மூவரும் ஒருவரை ஒருவர் தாக்கி, கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த நெசவாளர் காலனியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்ற இளைஞர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனிடையே, கடை ஊழியரை தாக்கி விட்டு தப்பிச் சென்ற மற்ற இருவரை, அன்னதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்