மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம்... நண்பன் கையால் நடந்த கொடூரம் - கேரளாவில் அதிர்ச்சி

x

கேரள மாநிலம் இடுக்கியில் மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். தொடுபுழா கஞ்சார் பகுதியில் சாம் ஜோசப், ஜிதின் உட்பட நண்பர்கள் 4 பேர் மது அருந்திய போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜிதின் என்பவர் ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தில் குத்தியதில் சாம் ஜோசப் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நண்பர்கள் இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான ஜிதினை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்