ஆக்கிரமித்து கட்டிய வீடு...இடிப்பதை பார்த்து குரைத்து எதிர்ப்பு தெரிவித்த வளர்ப்பு நாய்

x

அரூர் அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடித்தபோது, வளர்ப்பு நாய் குரைத்து எதிர்ப்பு தெரிவித்தது அனுதாபத்தை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டம், செல்வசமுத்திரம் பகுதியில் ரவி என்பவரின் குடும்பத்தினர் 15 ஏக்கர் நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து வீடு கட்டியும், விவசாயமும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அப்பகுதிக்கு வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் வந்தனர். ரவியின் வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிப்பதை பார்த்து ரவியின் வளர்ப்பு நாய், பொக்லைன் இயந்திரம் மற்றும் அதிகாரிகளை பார்த்தும் தொடர்ந்து குரைத்தபடியே, உரிமையாளர் மீதான நன்றியுணர்வை வெளிப்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்