குற்றாலத்தில் குதூகல படுத்திய நாய் கண்காட்சி.. ஒரே இடத்தில் 220 நாய்கள்

x

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடந்து வரும் சாரல் திருவிழாவில் நாய் கண்காட்சி நடைபெற்றது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம், ஜெர்மன் ஷெப்பர்ட் உட்பட 24 வகையான 220 நாய்கள் கண்காட்சியில் கலந்துக் கொண்டன. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நாட்டின நாய்கள் பிரிவில் பெரியசாமி என்பவரின் கன்னி இன வகை நாய்க்கு வழங்கப்பட்டது. வெளிநாட்டின நாய்கள் பிரிவில் பாலகிருஷ்ணன் என்பவரின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்