கோழியை நாய் கடித்த தகராறு... உயிர் பலி வாங்கிய சிறு சண்டை

x

கோழியை நாய் கடித்த தகராறு... உயிர் பலி வாங்கிய சிறு சண்டை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, கோழியை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில், இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

நத்தம் காமராஜர் நகரை சேர்ந்த விஷ்ணு என்ற இளைஞர் வளர்த்து வந்த நாய் ஒன்று, அதே பகுதியை சேர்ந்த முத்தன் என்பவருக்கு சொந்தமான கோழியை கடித்ததாக கூறப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த முத்தன், மறைத்து வைத்திருந்த கத்தியால், விஷ்ணுவை சராமரியாக குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு, நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முத்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்