இறந்து போன பாம்பை விழுங்கிய குழந்தை - எங்கும் கேட்டிராத அதிர்ச்சி சம்பவம் | Uttarpradesh

x

உத்தரபிரதேச மாநிலம், மத்னாப்பூர் கிராமத்தில் மூன்று வயது குழந்தை இறந்து போன பாம்பை கடித்து விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆயுஷ் என்ற மூன்று வயது குழந்தை, தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, இறந்து போன பாம்பை கடித்து விழுங்கியுள்ளது. இதனைக் கண்ட குழந்தையின் பாட்டி, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தையை 24 மணி நேரம் கண்காணிப்பில் வைத்து பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நலமாக இருப்பதாகக் கூறினர். மேலும், குழந்தை கடித்து விழுங்கிய பாம்பு, விஷமற்றதன்மையான தாக தெரிவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்