பசியால் கதறிய 14 மாத குழந்தை..சோறுக்கு பதில் விஷத்தை ஊட்டிய தந்தை.. சண்டையால் பறிபோன பிஞ்சு உயிர்-திருப்பத்தூரில் அதிர்ச்சி

x

குடும்பத்தகராறு காரணமாக சொந்த தந்தையே தன் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த நிலையில், இதில் 14 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் திருப்பத்தூரில் நிகழ்ந்துள்ளது..கந்திலி அடுத்த கிழக்குபதனவாடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் ஜல்லியூர் பகுதியை சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இத்தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் சண்டை வர கோபத்தில் சத்யா தனது மூத்த மகளை மட்டும் கூட்டிக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். 14 மாத குழந்தை வேண்டாமணி பசியில் பாலுக்காக அழவே, சமாதானம் செய்ய முடியாமல் விரக்தியில் சிவக்குமார் கைக்குழந்தைக்கு பாலிலும், 2வது குழந்தை இலக்கியாவுக்கு உணவிலும் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி விட்டதாக தன் அண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதை சாப்பிட முடியாமல் 2வது குழந்தை வாந்தி எடுத்துள்ளது. சிவக்குமாரின் அண்ணன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டு மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த 14 மாத குழந்தை வேண்டாமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டது. சிவக்குமாரும் இலக்கியாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்