தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு CISF வீரர் தற்கொலை | சேலத்தில் பரபரப்பு | CISF | SALEM

x

சேலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே இரும்பாலை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி சக்திவேல் என்பவர், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்திய தொழில் படையின் தென்மண்டல அதிகாரிகளும், தமிழக காவல்துறையும் சம்பவத்தின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த காவலாளி பணியாற்றிய அலுவலகம், உடன் பணியாற்றிய காவலர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், தற்கொலைக்கான காரணத்தை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்