பாதாள சாக்கடைக்குள் கீழே குனிந்து வேலை செய்தவர் மீது ஏறிய கார்..துடிதுடித்து பலி- பதறவைக்கும் காட்சி

x

மும்பையில் கார் ஏறி தூய்மைப் பணியாளர் உயிரிழந்த சம்பவத்தில், ஒப்பந்ததாரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மும்பை கண்டிவலி பகுதியில் உள்ள சாலையில், பாதாள சாக்கடையை தூய்மைப்படுத்தும் பணியில், ஜெகவீர் யாதவ் என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற கார் ஏறியதில் படுகாயமடைந்த அவர், பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொழிலாளி மீது கார் ஏறிய பதைபதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகின. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் ஓட்டுநர் மற்றும் போதிய எச்சரிக்கை பலகை வைக்காத ஒப்பந்ததாரரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்