பேருந்துடன் கார் மோதி விபத்து...கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு | Kovil Patti | Accident

x

கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில், கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணா நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் கீர்த்திக் மற்றும் அவரது நண்பர்கள், அருண்குமார், செந்தில்குமார், அஜய் மற்றும் விக்னேஷ் ஆகியோர், காரில் கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இளையரசனேந்தல் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து மீது கார் மோதியது. இந்த விபத்தில் கீர்த்திக், செந்தில்குமார், அஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அருண்குமார், விக்னேஷ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்