நடுவானில் பயணியின் காதை பதம் பார்த்த துப்பாக்கி குண்டு.. மியான்மரில் அதிர்ச்சி சம்பவம்

x

மியான்மரில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது துப்பாக்கி குண்டு பாய்ந்து பயணி படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த மியான்மர் நேஷனல் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம், லோய்கா விமான நிலையத்தில் தரையிறங்க மெல்ல மெல்ல பறக்கும் உயரத்தைக் குறைத்துக் கொண்டே வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பயணி ஒருவருக்கு காதில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தரையில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டு குண்டு பாய்ந்தது கண்டறியப்பட்ட நிலையில், இது தொடர்பாக கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், கிளர்ச்சியாளர்கள் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்