கண்ணிமைக்கும் நேரத்தில் "தொப்பென்று" விழுந்த பாலம் - பரபரப்பு காட்சிகள்

x

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இடிக்கப்பட்ட ஆங்கிலேயர் காலத்து பழைய பாலத்தின் ஒரு பகுதி ஆற்றுக்குள் விழுந்ததை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பின் காரணமாக பவானி ஆற்றின் குறுக்கே இருந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டப்பட உள்ளது. பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பாலத்தை இடிக்கும் பணி நடைபெற்ற போது ஒரு பகுதி அப்படியே ஆற்றிற்குள் தொப்பென்று விழுந்ததை பொதுமக்கள் ஆவலோடு வேடிக்கை பார்த்தனர்...


Next Story

மேலும் செய்திகள்