காற்றில் பறந்த பந்தல் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சிறுவனும்,பாட்டியும்.. புதுமனை புகுவிழாவில் கோரம் - ஆந்திராவில் அதிர்ச்சி

x

புதுமனை புகுவிழாவின் போது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கனுகுமாரி பள்ளி கிராமத்தை சேர்ந்த சுப்பா ரெட்டி கட்டியிருந்த வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரது உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். வீட்டின் எதிரே போடப்பட்டிருந்த பந்தலின் கீழ் அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அங்கு வீசிய பலத்த காற்றில் பந்தல் பறந்து மின்சார வயர் மீது விழுந்து, பந்தல் போட பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பியில் பட்ட நிலையில், அங்கிருந்த சிறுவன் அந்தக் கம்பியைப் பிடிக்கவும் மின்சாரம் பாய்ந்துள்ளது. சிறுவனைக் காப்பாற்ற முயன்ற பாட்டி மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வழியிலேயே இருவர் உயிரிழக்க மேலும் நால்வருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்