16 வயது சிறுமி கொடூர கொலை… லவ் பிரேக்-அப்பால் நடந்த பயங்கரம்...

x

கொல்லப்பட்டவர் சாக்ஷி… டெல்லி, ரோகினி பகுதியைச் சேர்ந்தவர். 16 வயதாகும் சாக்ஷி சமீபத்தில்தான் பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறார்… சாக்ஷியின் பெற்றோர் மகளை சட்டம் படிக்க வைப்பதற்காக கனவு கண்டு கொண்டிருந்த போது, காதல் சாக்ஷியின் உயிருக்கு நாள் குறித்திருக்கிறது. ஆம், சாக்ஷியும் சாஹில் என்ற இருபது வயது இளைஞரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்திருக்கிறார்கள். சாஹில் ஏசி மெக்கானிக்காக வேலைப் பார்த்து வந்துள்ளார். சாக்ஷிக்கு ஏற்கனவே முதல் காதல் தோல்வியடைந்திருக்கிறது. இதையெல்லாம் தெரிந்தும் தன் காதலி மீது கண்மூடிதனமாக காதலை வளர்த்து வந்திருக்கிறார் சாஹில்.

இந்தநிலையில்தான் காதலர்களுக்கு இடையே அவ்வபோது சிறுசிறு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோவால் காதலை மொத்தமாக பிரேக்கப் செய்ய நினைத்திருக்கிறார் சாக்ஷி. முதற்கட்டமாக சாஹில் உடன் பேசுவதை நிறுத்திய சாக்‌ஷி வாட்ஸ்ப், செல்போன் கால் என அனைத்திலும் சாஹிலை பிளாக் செய்திருக்கிறார். காதலியின் திடீர் மாற்றம் காதலனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. காலில் விழாத குறையாக தன்னுடன் பேசுமாறு காதலியிடம் கெஞ்சியிருக்கிறார் சாஹில்… ஆனால், சாக்ஷி மனம் இறங்குவதாக இல்லை… மேற்கொண்டு தொந்தரவு செய்தால் போலீஸில் புகார் கொடுத்துவிடுவதாக காதலனை மிரட்டியிருக்கிறார். அளவுக்கு அதிகமான காதல் போதை சாஹிலுக்கு மனவிரக்தியை கொடுத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் காதலியை கொலைச் செய்யும் அளவுக்கு சைக்கோவாக மாற்றியிருக்கிறார்.

சம்பவத்தன்று இரவு சாக்ஷி தோழியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றிருக்கிறார்அப்போது காதலியை பின்தொடர்ந்து வந்த சாஹில் ஏற்கனவே தயாராக கொண்டுவந்த கத்தியால் சாக்ஷியை 22 முறை குத்தி கொலைச் செய்துவிட்டு உத்திரபிரதேசத்திலுள்ள தனது உறவினர் வீட்டில் தலைமறைவாகியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்