வயலுக்குள் புகுந்த 9 அடி நீள முதலை... அலறி ஓடிய விவசாயிகள் - திக் திக் காட்சிகள்

x

கர்நாடகா மாநிலம் விஜயநகர் மாவட்டம் ராஜ்வாலா பகுதியில் நெல் வயலுக்குள் ஒன்பது அடி நீள முதலை புகுந்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், விவசாயிகள் உதவியுடன் முதலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சுருக்கு வைத்து வீசப்பட்ட கயிறில் முதலை சிக்கியது.

இதையடுத்து முதலையை வனத்துறையினர் தூக்கிச் சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்