சிறுமியை வைத்து 6 மாதமாக பாலியல் தொழில் - 3 பெண் தரகர்கள் உட்பட 8 பேர் கைது

x

கரூர் அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக குழந்தைகள் நல அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் குழந்தைகள் நல அலுவலகர், கரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்நிலையில், தனிப்படை அமைத்து ரகசிய விசாரணை மேற்கொண்ட போலீசார், 3 பெண்கள் மற்றும் 5 இளைஞர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த 6 மாதங்களாக சிறுமியை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது.

இதையடுத்து, 8 பேரையும் சிறையில் அடைத்த போலீசார், சிறுமி ஒருவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்