"பயமா எனக்கா.." : செஸ் ஒலிம்பியாட்டில் இளசுகளை அலறவிடும் 78 வயது பாட்டி - ஒவ்வொரு மூவிலும் அதிரடி..!

x

மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாடில் 78 வயது மூதாட்டி ஒருவர், கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.

அறிவுசார்ந்த விளையாட்டுகளுக்கு வயது தடை இல்லை என்பார்கள்.

இதனை நிரூபிக்கும் விதமாக, மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றுள்ள மிக வயதான வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மொனாக்கோவைச் சேர்ந்த மூதாட்டி ஜூலியா லேபல் அரியாஸ்.

78 வயதாகும் ஜூலியாவிற்கு, மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் 18வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஆகும். நடப்பு தொடரில் 2 வெற்றி, 2 தோல்வியைப் பெற்றுள்ள ஜூலியா, செஸ் விளையாட்டிற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து, மற்ற வீரர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்