500வது போட்டியில் 76வது சதம்.. உலக அதிசயங்களில் ஒன்றாக மாறியது..! - அழிக்க முடியாத அரசனாக கோலி..!

x

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி, முன்னாள் கேப்டன் கோலிக்கு 500வது சர்வதேச போட்டியாக அமைந்தது. இதில் இந்தியாவின் முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம் 500வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். மேலும், வெளிநாட்டு மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி சதம் அடித்து உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கோலியின் 29 சதமாகவும், ஒட்டுமொத்தமாக 76வது சதமாகவும் இது அமைந்தது. சாதனை சதமடித்துள்ள கோலியை முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்