வணிக வளாகக் கட்டடத்தில் தீ விபத்து | 70க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்பு

x

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வணிக வளாக கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 4 மாடிகளை கொண்ட கட்டடத்தில், 3வது மாடியில் தீ விபத்து நேரிட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், துரிதமாக செயல்பட்டு, கட்டடத்தில் இருந்த 70க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர். மேலும், 4வது மாடியில் குழந்தைகள் நல மருத்துவமனை இருப்பதால், அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்