Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-02-2023) | Morning Headlines | Thanthi TV

x

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், இன்று வாக்குப்பதிவு....காலை 7 மணி முதல், 238 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு....

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், 5 மணிக்கு தொடங்கியது, மாதிரி வாக்குப்பதிவு....77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மின்னணு இயந்திரங்கள் சரிபார்ப்பு.....

ஈரோடு இடைத்தேர்தல் பணியில் ஆயிரத்து 206 அலுவலர்கள் பங்கேற்பு...ரேண்டம் முறையில் வாக்குப்பதிவு மையங்கள் ஒதுக்கீடு....

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?....இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன....

பிரசாரத்தில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முதலமைச்சர் அறிவித்ததை எதிர்த்து, அதிமுக வழக்கு தொடர்ந்தால், சந்திக்கத் தயார்...சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்....

நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்...காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு...

எம்.ஜி.ஆரை போல் புதிய பாதையை தேர்ந்தெடுக்கும் தருணம் வந்து விட்டது.....தந்தி டிவி போட்டியில், ஓ.பி.எஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் திட்டவட்டம்....

தாயாரின் அஸ்தியை கங்கையில் கரைத்தார், ஓ.பன்னீர்செல்வம்...குடும்பத்துடன் காசிக்கு சென்று இறுதிக் கடமையை நிறைவேற்றினார்....

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்குத் தயாராகுங்கள்...மாநிலம் முழுவதும் உடனடியாக பூத் கமிட்டி அமைக்க கட்சியினருக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்....

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா சந்திப்பு..... முதல்வரின் பிறந்தநாள் விழா புகைப்படக்கண்காட்சியை தொடங்கி வைக்க அழைப்பு.....


Next Story

மேலும் செய்திகள்