எரிமலை உச்சியில் சிக்கித் தவிக்கும் 6 பேர்

x

எரிமலை உச்சியில் சிக்கித் தவிக்கும் 6 பேர்

ரஷ்ய எரிமலையில் இருந்து தவறி விழுந்து 6 பேர் பலியானதுடன் மேலும் 6 பேர் மலை உச்சியில் சிக்கித் தவிக்கின்றனர்.

ல்யுசெவ்ஸ்கயா சோப்கா எரிமலையானது பனி படர்ந்து காணப்படும்.

சுமார் 4 ஆயிரத்து 754 மீட்டர் உயரமுடைய இந்த எரிமலையில் ஏற முயற்சித்த போது, 4 ஆயிரத்து 200 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து 6 பேர் பலியான நிலையில், மேலும் சிக்கியுள்ள 6 பேரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், அதீத பனிப்புயல் காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்