5ஜி அலைக்கற்றை -இன்று 17ஆவது சுற்று ஏலம் | 5G spectrum auction

x

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நான்காவது நாளாக இன்றும் நடைபெறவுள்ளது. இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களில்16 சுற்று ஏலம் முடிந்துவிட்டதாகவும், இன்று 17வது சுற்று ஏலம் தொடங்கப்படவுள்ளதாகவும் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மூன்றாம் நாள் ஏலத்தின் முடிவில், 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை 1 லட்சத்து 49 ஆயிரத்து 623 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்